ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவை சந்தித்த சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி!

ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் குறும்படத்தில் நடித்து உலகப் புகழ்பெற்ற பொம்மன் - பெள்ளி தம்பதி மற்றும் படத்தை இயக்கிய கார்த்திகி கோன்சால்வ்ஸ் ஆகியோரை சி.எஸ்.கே கேப்டன் தோனி சென்னையில் இன்று சந்தித்து பாராட்டு தெரிவித்து அவர்கள் பெயர் அச்சிடப்பட்ட ஜெர்சியையும் பரிசளித்தார்.



சென்னை: ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினரை சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் வசித்து வரும் பொம்மன் - பெள்ளி தம்பதி, யானைகள் பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தாயை பிரிந்த ரகு, பொம்மி என்ற 2 குட்டி யானைகளை பராமரித்து தங்களின் குழந்தைகள் போல் வளர்த்து வந்தனர்.

இந்த குட்டி யானைகளை பொம்மன் - பெள்ளி தம்பதி எவ்வாறு பராமரித்து வந்தனர் என்பதை மையமாக கொண்டு தி எலிபன்ட் விஸ்பரரஸ் என்ற பெயரில் ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. இந்த ஆவண படத்தை கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கி இருந்தார். குனீத் மோங்கா தயாரித்திருந்தார்.

இந்த படத்தில் மிகவும் நேர்த்தியாக காட்டப்பட்டிருந்த பொம்மன்-பெள்ளி தம்பதிக்கும், யானை குட்டிகளுக்கும் இடையேயான உறவு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்த ஆவணப்படம் சமீபத்தில் நடந்த 95வது ஆஸ்கர் விழாவில் விருதையும் வென்றது. இதன்மூலம் பொம்மன்-பெள்ளி தம்பதி உலகம் முழுவதும் புகழ் பெற்றனர்.



இந்நிலையில், இன்று ஆவணப்பட இயக்குனர் கார்த்திகி மற்றும் பொம்மன் - பெள்ளி தம்பதி ஆகியோர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே கேப்டன் எம்.எஸ்.தோனியை சந்தித்தனர். அப்போது அவர்களை வெகுவாக பாராட்டிய தோனி, அவர்களுக்கு 7 ஆம் எண் கொண்ட அவரவர் பெயர் அச்சிடப்பட்ட ஜெர்சியை பரிசாக அளித்ததுடன், புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...