கோவையில் சாலையில் சென்ற நபரிடம் செல்போன் பறிப்பு - மின்வாரிய ஊழியர் கைது!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்து செல்போனை பறித்துச் சென்ற மர்மநபர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில், அதில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், குனியமுத்தூர் மின்வாரிய ஊழியர் வன்னியராஜா என்பது தெரியவந்தது.



கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் செல்போனை பறித்துச் சென்ற மின்வாரிய ஊழியரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோவை கவுண்டம்பாளையம் அருகே சாலையில் நடந்து சென்ற நபரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் செல்போனை பறித்து சென்றனர். அப்போது அவர்கள் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

இதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர். அவருடன் வந்தவர் தப்பிச் சென்ற நிலையில், பிடிபட்ட நபரை பொதுமக்கள் சாய்பாபா காலனி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வன்னியராஜா என்பதும், இவர் குனியமுத்தூர் மின்வாரியத்தில் மின் ஊழியராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், இவர் தனது நண்பருடன் நள்ளிரவில் சாய்பாபா காலனி பகுதியில் ஏற்கனவே ஒருவரிடம் செல்போனை பறித்துக் கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து வன்னியராஜாவை கைது செய்த போலீசார் தப்பி சென்ற அசோக் என்பவரையும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...