கோவையில் சாலையில் சென்ற நபரிடம் செல்போன் பறிப்பு - மின்வாரிய ஊழியர் கைது!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்து செல்போனை பறித்துச் சென்ற மர்மநபர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில், அதில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், குனியமுத்தூர் மின்வாரிய ஊழியர் வன்னியராஜா என்பது தெரியவந்தது.



கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் செல்போனை பறித்துச் சென்ற மின்வாரிய ஊழியரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோவை கவுண்டம்பாளையம் அருகே சாலையில் நடந்து சென்ற நபரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் செல்போனை பறித்து சென்றனர். அப்போது அவர்கள் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

இதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர். அவருடன் வந்தவர் தப்பிச் சென்ற நிலையில், பிடிபட்ட நபரை பொதுமக்கள் சாய்பாபா காலனி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வன்னியராஜா என்பதும், இவர் குனியமுத்தூர் மின்வாரியத்தில் மின் ஊழியராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், இவர் தனது நண்பருடன் நள்ளிரவில் சாய்பாபா காலனி பகுதியில் ஏற்கனவே ஒருவரிடம் செல்போனை பறித்துக் கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து வன்னியராஜாவை கைது செய்த போலீசார் தப்பி சென்ற அசோக் என்பவரையும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...