துடியலூரில் திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்!

கோவை மாவட்டம் துடியலூர் பகுதிக்கழக திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், பகுதிக்கழக பிரதிநிதிகள் பங்கேற்று திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.



கோவை: கோவை மாவட்டம் துடியலூரில் திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே திமுக சார்பில், திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.



துடியலூர் பகுதிக்கழக திமுக செயலாளர் அருள்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 1வது வட்ட செயலாளர் ராஜசேகர் அனைவரையும் வரவேற்றார்.

முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் வெ.நா.பழனியப்பன், மூத்த வழக்கறிஞர் அருள்மொழி, பகுதி அவைத்தலைவர் பழனிசாமி, துணை செயலாளர்கள் சண்முகசுந்தரம், குமார், ஐ.டி. பகுதி ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம், மாவட்ட பிரதிநிதிகள் சதீஸ்குமார், சோமசுந்தரம், தன்ராஜ், சம்பத்குமார், அருண்குமார், 2, 13, 14, 15 வட்ட கழக செயலாளர்கள் சண்முகம், சுந்தரம், சோமசுந்தரம், ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக திமுக தலைமை கழகப் பேச்சாளர் உடுமலை தண்டபாணி கலந்துக் கொண்டு திமுக 2 ஆண்டு சாதனைகள் குறித்து பேசினார்.

இந்த கூட்டத்தில் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், 1வது மாமன்ற உறுப்பினர் கற்பகம், 2வது மாமன்ற உறுப்பினர் புஷ்பமணி, மதிமுகவை சேர்ந்த 14வது மாமன்ற உறுப்பினர் சித்ரா தங்கவேல், பொதுக்குழு உறுப்பினர் கதிர்வேல்சாமி உட்பட பொதுக்குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள், துணை அமைப்பாளர்கள், 1, 2, 13, 14, 15 வட்ட கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...