கோவையில் 22.5 டன் பழங்கள் பறிமுதல் - உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி

கோவையில் பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழு நடத்திய அதிரடி ஆய்வில், ரசாயன கலந்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 22.5 டன் மாம்பழங்கள் மற்றும் சாத்துகுடி பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான அந்த மாம்பழங்களை உரம் தயாரிப்பதற்காக குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது.



கோவை: தமிழ் நாடு உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவின் பேரில், மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் படி, மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் தமிழ்செல்வன் தலைமையில்,உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு, கோவை மாநகரில் பகுதில் உள்ள வைசியால் வீதி, பெரிய கடைவீதி, பெரிய கடை வீதி -I, மற்றும் II, கருப்பன கவுண்டர் வீதி, முத்து விநாயகர் கோவில் வீதி, தர்மராஜா கோவில் வீதி, கெம்பட்டி காலனி வீதி ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 8 குழுவாக மொத்தம் 16 பேர் அடங்கிய குழுவினர் மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் திடீர் கள ஆய்வு மேற்கொண்டனர்.



அப்போது, 45 கடைகள் மற்றும் குடோன்கள் ஆய்வு செய்யப்பட்டது.



அதில், 16 கடை மற்றும் குடோன்களில் சிறிய இரசாயன பொட்டலங்களை ஒவ்வொரு பழ பெட்டிகளுக்குள் வைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்து, பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் சுமார் 22,618 (22.5 டன்) எடையும், மேலும் சுமார் 2,510 கிலோ (2.5 டன்) எடை அளவு உள்ள சாத்துகுடி ஆக மொத்தம் 25,128 கிலோ (சுமார் 25 டன்) எடை பறிமுதல் செய்யப்பட்டன.



அவை அனைத்தும் மாநகராட்சி குப்பை கிடங்கில் உரம் தயாரிக்க கொட்டி அழிக்கப்பட்டு, அதன் பின்னர் அதனை உரமாக தயாரிக்க முழுவதுமாக அரைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பழங்களின் சந்தை மதிப்பு, சுமார் ரூபாய் 12,56,400/. மேலும், பழங்கள் பறிமுதல் செய்யப்பட்ட 16 பழக்கடை மற்றும் குடோன்களுக்கு உணவு பாதுகாப்புத் துறையின் (Notice) நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதுபோன்று சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வில், செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படுத்திய இரசாயன பாக்கெட்டு அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், இதுபோன்ற கார்பைட் கல், எத்திலீன் இரசாயன பவுடர் பாக்கெட்டுகளை கொண்டு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை உண்பதால் வயிறு தொடர்பான பிரச்சினைகள், கண் எரிச்சல், சரும அலர்ஜி, வாந்தி, பேதி போன்ற உபாதைகள் உண்டாகலாம்.

சில நேரங்களில் சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதில் ஆர்சானிக் மற்றும் பாஸ்பரஸ் இருந்தால் புற்றுநோய் உண்டாகவும் வாய்ப்பு உள்ளது. உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு உடல் வலுவிலக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, இதுபோன்று முறையற்ற விகிதத்தில் இரசாயனங்கள் கொண்டு மாம்பழங்களை பழுக்க வைப்பவர்கள்மீது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இதுபோன்ற திடீர் கள ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...