கோவை லங்கா கார்னர் சுரங்கப்பாதையில் வெள்ளநீர் வெளியேற்றம்

கோவையில் பெய்த கனமழையால் லங்கா கார்னர் பகுதி சுரங்கப்பாதையில் தேங்கிய வெள்ளநீர் வெளியேற்றப்படுவதை மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது. அந்த வகையில், நேற்று பெய்த கனமழையால், லங்கா கார்னர்‌ பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில்‌ வெள்ளநீர் தேங்கியது.

இதனை, வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையர் பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌. அப்போது, உதவி ஆணையர்‌ மகேஷ்கனகராஜ்‌, உதவி பொறியாளர்‌ விமல்ராஜ்‌, சுகாதார அலுவலர்‌ குணசேகரன்‌, சுகாதார ஆய்வாளர்‌ தனபால்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்.

இதேபோல், கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.19க்குட்பட்ட எம்‌.கே.பி. காலனி பகுதியில்‌ நேற்று இரவு பெய்த கன மழையில்‌ மரம்‌ ஒன்று பெயர்ந்து விழுந்தது.



இதனை, கோவை மாநகராட்சி மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, விழுந்த மரத்தை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்‌. அப்போது மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...