துடியலூரில் பிரபல தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சட்டவிரோத பண பரிவர்த்தனை குறித்த வழக்கில் பிரபல தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு, உறவினர்கள் வீடு, ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் மார்ட்டின் குழும நிறுவன அலுவலகங்கள் உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: சட்டவிரோத பண பரிவர்த்தனை குறித்த வழக்கில் பிரபல தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கேரளா, சிக்கிம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் சில நிபந்தனைகளுடன் அனுமதியளிக்கப்பட்டு லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்த மாநிலங்களில் நடைபெற்று வரும் லாட்டரி விற்பனையில் கோவையை சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் முக்கிய பங்கு வகித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக மார்ட்டின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த சில ஆண்டுகளில் 2 முதல் 3 முறை சோதனை நடைபெற்றுள்ளது. இந்த சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இந்நிலையில் மீண்டும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக பிரபல தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் உள்ள மார்ட்டின் குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனத்தில் 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 11 மணி முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.



முன்னதாக கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள மார்ட்டின் ஹோமியோபதி கல்லூரி மற்றும் மருத்துவமனை வெள்ளகிணறு பிரிவு பகுதியில் உள்ள அவரது வீடு ஆகியவற்றிலும் தனித்தனியே அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய ரிசர்வ் போலீஸ் உதவியுடன் இந்த மூன்று இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனையின் காரணமாக வாயில் கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டு வெளி ஆட்கள் யாரும் உள்ளே நுழைய முடியாதபடி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சோதனையில் கேரள மாநிலத்தை சேர்ந்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பள்ளியில் போதை எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பீளமேடு தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் தீமைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்...

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...