கோவை வடக்கு,தெற்கு மண்டலங்களில் ரூ.1.92 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்த மேயர்!

கோவை வடக்கு மற்றும்‌ தெற்கு மண்டலங்களில்‌  தார்சாலை, உயர்மட்ட பாலம்‌, தடுப்புவேலி‌, மின்‌ மயானத்தில்‌ மின்சடங்கு மண்டபம்‌ மற்றும்‌ கழிவறை கட்டுமான பணி என ரூ.1.92 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான கட்டுமான பணிகளை மேயர் கல்பனா பூமிபூஜை செய்து துவங்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்டத்தின் வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் ரூ.1.92 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான பணிகளை மேயர் கல்பனா தொடங்கி வைத்தார்.



கோவை‌ மாநகராட்சியின் தெற்கு மண்டலம் வார்டு எண்‌.94க்கு உட்பட்ட அன்னை இந்திரா நகா்‌, 2 மற்றும்‌ 3வது வீதியில்‌ தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டு திட்டம்‌ - 3(TURIP) கீழ்‌ ரூ.30 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 480 மீட்டர்‌ தொலைவிற்கு நடைபெற்று வரும்‌ தார்‌ சாலை அமைக்கும்‌ பணி,



வார்டு எண்‌.97க்கு உட்பட்ட பிள்ளையார்புரம்‌ சாலையில்‌ ரூ.62 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ உயர்மட்ட பாலம்‌ அமைத்தல்‌, கஸ்தூரி கார்டன்‌ எதிரில்‌ தடுப்புவேலி அமைக்கும்‌ பணிகள்‌,



வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.10க்கு உட்பட்ட சரவணம்பட்டி பகுதியில்‌ சி.ஆர்‌.ஐ.பம்ப்ஸ்‌ நிறுவனத்தின்‌ சார்பில்‌ நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌ ரூ.1 கோடி மதிப்பீட்டில்‌ மின்‌ மயானத்தில்‌ மின் சடங்குமண்டபம்‌ மற்றும்‌ கழிவறை கட்டுமான பணிகள்‌,

இவ்வாறு மொத்தமாக ரூ.1.92 கோடி மதிப்பீட்டிலான பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ பூமிபூஜை செய்து, தொடங்கி வைத்தார்‌.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...