கர்நாடகாவில் காங்கிரஸ்க்கு வெற்றிமுகம் - கோவையில் உற்சாகக் கொண்டாட்டம்!

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தில், காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னணி வகித்து வருவதை, கோவையில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடினர்.


கோவை: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில், அங்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்துவருகிறது.

இதனை, நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இதையொட்டி, பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.



கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சாய் சாதிக், ராம்கி உள்ளிட்டோர், சாலையில் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிப்பதை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Newsletter

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...