திருப்பூரில் பாஜக சார்பில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை துவங்கி வைத்த நடிகை நமீதா!

திருப்பூரில் பாஜக சார்பில் துவங்கப்பட்ட மின்னொளி கிரிக்கெட் போட்டியினை திரை நட்சத்திரமும் பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினருமான நமீதா கலந்து கொண்டு பவுலிங் மற்றும் பேட்டிங் விளையாடி வீரர்களை உற்சாகப்படுத்தி போட்டிகளை துவக்கி வைத்தார்.



திருப்பூர்: திருப்பூரில் பாஜக சார்பில் நடைபெறும் மின்னொளி கிரிக்கெட் போட்டியை நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான நமீதா துவங்கி வைத்தார்.

திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் அங்கேரிபாளையம் சாலையில் மாநில தலைவர் அண்ணாமலை கோப்பைக்கான மின்னொளி கிரிக்கெட் போட்டி என்ற பெயரில் கட்சி நிர்வாகிகளுக்கான கிரிக்கெட் போட்டி இன்று துவங்கியது.



இதனை மாநில பொதுச் செயலாளர் கே.பி. முருகானந்தம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினரும் திரை நட்சத்திரமான நமீதா கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.



முன்னதாக மேடையில் பேசிய நமீதா, எந்த கட்சியிலும் இல்லாத அளவு கட்சியினை குடும்பம் போன்ற ஒற்றுமையாக கொண்டு செல்வதற்கு இது போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது என்றார்.

தொடர்ந்து கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர் பௌலிங் மற்றும் பேட்டிங் என விளையாடி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நமீதா பேசியதாவது, கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து வருத்தம் இருந்தாலும் கூட இந்த முறை இல்லை எனில் அடுத்த முறை என ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை நோக்கி செயல்பட கட்சி தயாராகி வருகிறது. இந்த கிரிக்கெட் போட்டியில் பாஜகவின் நிர்வாகிகள் 24 அணிகளாக பிரிந்து ஏழு ஓவர் கிரிக்கெட் போட்டிகளை விளையாட உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...