திருப்பூரில் பாஜக சார்பில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை துவங்கி வைத்த நடிகை நமீதா!

திருப்பூரில் பாஜக சார்பில் துவங்கப்பட்ட மின்னொளி கிரிக்கெட் போட்டியினை திரை நட்சத்திரமும் பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினருமான நமீதா கலந்து கொண்டு பவுலிங் மற்றும் பேட்டிங் விளையாடி வீரர்களை உற்சாகப்படுத்தி போட்டிகளை துவக்கி வைத்தார்.



திருப்பூர்: திருப்பூரில் பாஜக சார்பில் நடைபெறும் மின்னொளி கிரிக்கெட் போட்டியை நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான நமீதா துவங்கி வைத்தார்.

திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் அங்கேரிபாளையம் சாலையில் மாநில தலைவர் அண்ணாமலை கோப்பைக்கான மின்னொளி கிரிக்கெட் போட்டி என்ற பெயரில் கட்சி நிர்வாகிகளுக்கான கிரிக்கெட் போட்டி இன்று துவங்கியது.



இதனை மாநில பொதுச் செயலாளர் கே.பி. முருகானந்தம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினரும் திரை நட்சத்திரமான நமீதா கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.



முன்னதாக மேடையில் பேசிய நமீதா, எந்த கட்சியிலும் இல்லாத அளவு கட்சியினை குடும்பம் போன்ற ஒற்றுமையாக கொண்டு செல்வதற்கு இது போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது என்றார்.

தொடர்ந்து கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர் பௌலிங் மற்றும் பேட்டிங் என விளையாடி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நமீதா பேசியதாவது, கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து வருத்தம் இருந்தாலும் கூட இந்த முறை இல்லை எனில் அடுத்த முறை என ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை நோக்கி செயல்பட கட்சி தயாராகி வருகிறது. இந்த கிரிக்கெட் போட்டியில் பாஜகவின் நிர்வாகிகள் 24 அணிகளாக பிரிந்து ஏழு ஓவர் கிரிக்கெட் போட்டிகளை விளையாட உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...