கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை!

கோவை கோனியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது யார், உண்டியலில் பணம், நகை எவ்வளவு இருந்தது என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அன்றாடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து, தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலின் பூட்டை உடைத்து அதிலிருந்த பணம், நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.



உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளை போயிருந்ததை கண்ட கோவில் காவலாளி அதிர்ச்சியடைந்து உடனே இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர்.



மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா? என்பது குறித்தும் சோதனை செய்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் கோவில் தேர் திருவிழா பல ஆயிரம் பக்தர்கள் புடைசூழ வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்த நிலையில் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது? அதனை கொள்ளையடித்து சென்றவர்கள் யார்? இந்த சம்பவத்தில் ஒரே நபர் ஈடுபட்டாரா? அல்லது கூட்டு சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனரா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...