தமிழகத்தில் 26,000 கோவில்களில் அர்ச்சகர்கள் இல்லை - முன்னாள் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தகவல்!

கோவையில் நடைபெற்ற உலக சிவனடியார்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்க வேல், தமிழகத்தில் 26,000 கோவில்களில் அர்ச்சகர்கள் இல்லாத சூழல் நீடிக்கிறது. இந்த கோவில்களில் உள்ள தெய்வ திருமேனிகளை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.


கோவை: தமிழகத்தில் 26,000 கோவில்களில் அர்ச்சகர்கள் இல்லாத சூழல் நீடிப்பதாக முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

கோவை பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் திருமடத்தில் உலக சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் சைவப்பெருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வை தொடர்ந்து, பொன்மாணிக்கவேல் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,



உலகில் பல நாடுகளிலும் சிவனடியார்கள் உள்ளனர். குறிப்பாக தமிழகத்திலுள்ள சிவனடியார்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

அதற்கான நோக்கம் ஒன்று தான். நம் முன்னோர்கள் தேடி வகுத்துக் கொடுத்து கோவில்களை இறைவனின் திருமேனிகளையும் பாதுகாப்பது தான். தமிழகத்தில் 26,000 கோவில்களில் அர்ச்சகர்கள் இல்லாத சூழல் நீடிக்கிறது.

அனைத்து கோவில்களிலும் உள்ள தெய்வ திருமேனிகளை பாதுகாக்க வேண்டும். அதற்கு 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உலக சிவனடியார் திருக்கூட்டத்தில் இணைய வேண்டும். தெய்வ தொண்டு ஆற்ற வேண்டும்.

அப்போது இந்து சமயம் தழைத்தோங்கும், கோவில்களும், திருமேனிகளும் பாதுகாக்கப்படும். அடுத்து வரும் தலைமுறையினருக்கு வழிகாட்டுதலாக இருக்கும். கோவில் சிலை திருட்டு வழக்குகள் பதிவு செய்வதில் காவல்துறையினர் அக்கரை காட்டவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...