பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கி மீண்டும் படிப்பை தொடர வைக்கும் போலீசார்!

கோவை மாநகர் பகுதியில் பல்வேறு காரணங்களுக்காக பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களை காவல்துறை சார்பில் நேரில் சந்தித்து, அவர்களுக்கு கவுன்சலிங் வழங்கி, படிப்பை மீண்டும் தொடர பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களுக்கு கவுன்சலிங் வழங்கி படிப்பை மீண்டும் தொடர வைத்து காவல்துறை சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படித்து பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக பள்ளி படிப்பை பாதியில் விட்டவர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதன்படி இடைநின்ற மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, கல்வி உள்ளிட்ட அடிப்படை உதவிகள் குறித்து மாநகர போலீஸ் துறையின் தனி சிறுவர் காவல் உதவி பிரிவு, சட்டம் ஒழுங்கு பிரிவு ஆகியவை ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாநகரில் 286 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டதில் 894 மாணவ - மாணவிகள் தங்களது படிப்பை பாதியில் கைவிட்டது தெரியவந்தது. இதில், 226 மாணவர்கள் சம்பந்தப்பட்ட போலீசார் நேரில் சந்தித்து படிப்பை பாதியில் விட்டதற்கான காரணம் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு தகுந்த கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

இதில், 91 மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இவர்கள் நடந்து முடிந்த முழு ஆண்டு தேர்வையும் எழுதினர். இதில் 12 பேருக்கு பள்ளி கட்டண உதவியும், 4 பேருக்கு மருத்துவ உதவியும் தன்னார்வ அமைப்புகள் மூலம் வழங்கப்பட்டன.

கோவை மாநகரில் 702 மாற்றுத்திறனாளி மாணவ - மாணவிகள் உள்ளது கண்டறியப்பட்டது. இவர்களில் 316 பேரை சம்பந்தப்பட்ட போலீசார் கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் கடந்த 10-ந் தேதி வரை நேரில் சந்தித்து அவர்களின் குறைகள் குறித்து கேட்டறிந்தனர்.

இதில் 43 பேருக்கு பள்ளி கட்டணம், 5 பேருக்கு மருத்துவ உதவி செய்யப்பட்டதுடன், 2 பேரின் பெற்றோருக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டது. இதுதவிர குழந்தைகள் பாதுகாப்பு, இணை வழி குற்றங்கள் குறித்து பள்ளிகளுக்கு நேரடியாக சென்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதுதவிர கொலை குற்ற வழக்குகள், சாலை விபத்து வழக்குகள், போக்சோ வழக்குகள், குடும்ப பிரச்சினைகள் உள்ளிட்டவற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் கடந்த 2022-ம் ஆண்டு முதல் மனநல ஆலோசகர்கள் உதவியுடன் 131 பேருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...