கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் - போலீசார் தீவிர சோதனை!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதிகப்படியான மக்கள் கூட்டம் காணப்படும் என்பதால் போலீசார் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களை குறைதீர்ப்பு நாள் கூட்டத்தை முன்னிட்டு போலீசார் தீவிர சோதனைக்கு பிறகே பொதுமக்களை அனுமதித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கமாக திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பல்வேறு மக்கள் அவர்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வழங்குவர். கோரிக்கை மனுக்களை அளிக்க வரும் பொது மக்களில் சிலர், அல்லது அரசியல் கட்சிகள் அமைப்புகளில் சேர்ந்த சிலர் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டங்களையும் முன்னெடுப்பர்.

எனவே மக்கள் குறை தீர்ப்பு நாளன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகப்படியான மக்கள் கூட்டம் காணப்படும். இதனால் போலீசாரும் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு பொதுமக்களின் உடமைகளை சோதனை செய்த பின்னரே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் பொதுமக்களை அனுமதிப்பர்.

சமீப காலங்களாக மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வரும் பொது மக்களில் சிலர் திடீரென மண்ணெண்ணெய், பெட்ரோல் உள்ளிட்டவற்றை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலை முயற்சிக்கு முயல்கின்றனர். இவ்வாறான செயல்களில் ஈடுபடும் பலரும் தண்ணீர் பாட்டில்களில் நீரைக் கொண்டு வருவது போல் மண்ணெண்ணெய் பெட்ரோல் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து இதுபோன்று சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

எனவே ஒவ்வொரு முறையும் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.



அதன்படி இன்றைய தினம் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு முகாம்களிலும் பொதுமக்கள் தீக்குளிப்பு போன்ற அசம்பாவித செயல்களில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு உடமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் எடுத்து வரும் தண்ணீர் பாட்டில்களும் சோதனை செய்யப்படுகிறது. தண்ணீர் பாட்டிலில் இருப்பதை குடித்து பார்த்த பின்னரே காவல் துறையினர் பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதி வழங்குகின்றனர்.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...