ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய ராணுவ வீரர் - திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் மனு!

திருப்பூர் அடுத்த இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்த நிலையில், வெங்கடேசன் என்ற ராணுவ வீரர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.


திருப்பூர்: திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் ஒருவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணமாகி இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.



இந்நிலையில், இவருக்கும், ராணுவத்தில் பணியாற்றும் உறவுக்காரரான வெங்கடேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. வெங்கடேசன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி நெருங்கி பழகியதால், அவர் கர்ப்பமடைந்துள்ளார்.

இதையறிந்த வெங்கடேசன் தோழியுடன் சேர்ந்து குளிர்பானத்தில் கருகலைப்பு மாத்திரை கலந்து கொடுத்ததால் கரு கலைந்துள்ளது. இதுகுறித்து கேட்டபோது வெங்கடேஷ் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது எனவும், வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இருவரும் தனிமையிலிருந்த போது எடுத்த போட்டோ, வீடியோவை வைத்து கொண்டு, என்னை தொந்தரவு செய்தால் அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டி வருகிறார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.



இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...