கோவையில் டிக்கெட் கேட்ட தனியார் பேருந்து நடத்துனரின் விரலை கடித்த நபர் கைது - பரபரப்பு!

கோவை - பொள்ளாச்சி இடையே செல்லும் தனியார் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வரும், உடுமலையைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (47) நேற்று பணியிலிருந்த போது, பேருந்தில் ஏறிய பிரின்ஸ் என்பவரிடம் டிக்கெட் கேட்டபோது, மதுபோதையில் இருந்த அவர், கிருஷ்ணகுமார் விரலை கடித்த நிலையில், அதை தடுக்க முயன்ற மற்றொரு பயணியின் விரலையும் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தனியார் பேருந்தில் டிக்கெட் கேட்ட நடத்துனர் விரலை பயணி ஒருவர் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (47). இவர் கோவை - பொள்ளாச்சி செல்லும் தனியார் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்ற பேருந்தில் கிணத்துக்கடவு வடபுதூர் பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் (42), என்பவர் பயணம் செய்துள்ளார்.

சுந்தராபுரம் பொங்காளியம்மன் கோவில் அருகே பேருந்து வந்த போது கிருஷ்ணகுமார் பிரின்ஸிடம் டிக்கெட் எடுக்க அறிவுறுத்தியுள்ளார். அப்போது மது போதையில் இருந்த பிரின்ஸ் நடத்துனர் கிருஷ்ணகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் திடீரென கிருஷ்ணகுமாரின் கைவிரல்களை கடித்ததோடு, தாக்கியுள்ளார்.

அப்போது நடத்துனரை காப்பாற்ற வந்த கிருஷ்ணசாமி என்பவரது கையையும் பிரின்ஸ் கடித்துள்ளார். அங்கிருந்த சக பயணிகள் அவரை மடக்கி பிடித்தனர். இதையடுத்து கிருஷ்ணகுமார் போத்தனூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார் பிரின்ஸிடம் விசாரணை மேற்கொண்டு, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...