கோத்தகிரி மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து - 19 பேர் காயம்!

சென்னை பூந்தமல்லியில் இருந்து 2 சிறுவர்கள் உள்பட 19 பேர் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் வேனில் சென்னைக்கு திரும்பிய போது, கீழ்தட்டப்பள்ளம் பகுதியில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேரும் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.


நீலகிரி: ஊட்டி அருகே கோத்தகிரி மலைப்பாதையில் வேன் விபத்துக்குள்ளானதில் சுற்றுலாப் பயணிகள் 19 பேர் காயமடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்திற்கு சென்னை பூந்தமல்லியில் இருந்து 2 சிறுவர்கள் உள்பட 19 பேர் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.

நேற்று ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு, இன்று காலை ஊட்டியிலிருந்து கோத்தகிரி மலைப்பாதை வழியாக மேட்டுப்பாளையத்திற்கு வேனில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கீழ்தட்டப்பள்ளம் பகுதியில் சுற்றுலா வேன் சென்று கொண்டிருக்கும் போது, டிரைவர் பிரேக் போட முயன்றுள்ளார்.

ஆனால் பிரேக் பிடிக்காமல், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விழுந்து விபத்திற்குள்ளானது.

உடனடியாக அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் ரோந்து போலீசார் வேனில் சிக்கியிருந்த நபர்களை மீட்டனர்.

பின்னர் விபத்தில் காயமடைந்தவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மலைப்பாதையில் அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் தொடர்ந்து ஏற்படுவதால், ஓட்டுனர்கள் வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...