கோவை பீளமேடு அருகே இளைஞரை கத்தியால் குத்திய வடமாநில முதியவர் கைது!

கோவை - அவிநாசி சாலையில் விமான நிலையம் அருகே கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் ஒரிசாவை சேர்ந்த பிராவாட் மாலிக் (28) என்பவரை லாஜ்ரூஷ் டொப்போ (70) என்ற முதியவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை அருகே செல்போன் காணாமல் போனதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வடமாநில இளைஞரை முதியவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரிசா மாநிலம் கொன்டரப்பரா பகுதியை சேர்ந்த மோகன் மாலிக் என்பவரது மகன் பிராவாட் மாலிக் (28). இவர் கோவை - அவிநாசி சாலையில் விமான நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் தனியார் கண் மருத்துவமனை கட்டட வேலைக்காக அதே பகுதியில் சக ஒடிசா தொழிலாளர்களுடன் தங்கி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் பிராவாட் மாலிக் அறையில் தங்கிருக்கும் லாஜ்ரூஷ் டொப்போ (70) என்பவரது செல்போன் மாயமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறையில் இருந்த பிராவாட் மாலிக்கிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த லாஜ்ரூஷ் டொப்போ அங்கிருந்த கத்தியை எடுத்து பிராவாட் மாலிக் வயிற்றில் குத்தியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை சக தொழிலாளிகள் மீட்டு அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த பீளமேடு போலீசார் இளைஞரை கத்தியால் குத்திய லாஜ்ரூஷ் டொப்போவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...