கோவையில் பெண்ணிடம் நகைபறிப்பில் ஈடுபட்ட வழக்கு - கைதான இருவரும் தப்பிக்க முயன்ற போது விழுந்து கை உடைந்தது!

கோவை ஜி.வி.ரெசிடென்சி அருகே நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம், காரில் வந்து செயினை பறிக்க முயன்ற வழக்கில் கைதான இருவரும் போலீசாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்ற போது தடுக்கி விழுந்ததில் கை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



கோவை: கோவையில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட முயன்று கைதான இருவர், போலீசாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்ற போது, தடுக்கி விழுந்து கை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை பீளமேடு ஹட்கோ காலணியை சேர்ந்த கவுசல்யா என்ற பெண், ஜி.வி.ரெசிடென்சி அருகே நடைபயிற்சி மேற்கொண்ட போது, காரில் வந்த நபர்கள் அவரது கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றதில், அவர் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதுகுறித்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனிப்படை போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் 24 மணி நேரத்தில் அபிஷேக் குமார் மற்றும் சக்திவேல் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களை போலீசார் பிடித்த போது இருவரும் தப்ப முயன்றனர், அப்போது விழுந்ததில் அபிஷேக் குமாருக்கு வலது கையிலும், சக்திவேலுக்கு இடது கையிலும் முறிவு ஏற்பட்டுள்ளது.

தற்போது இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newsletter

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் 63-வது வார்டு இராமநாதபுரம் மற்றும் ஒலாம்பஸ் பகுதிகளில் வீடு வீடா...

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி வேட்பாளருக்கு கட்சிப் பெயரே பயன்படுத்த முடியாத நிலை - அண்ணாமலை விமர்சனம்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தி...

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...