திருப்பூரில் 4வது குடிநீர் திட்ட சோதனை ஓட்டம் - தண்ணீரை மலர் தூவி வரவேற்ற மேயர்!

திருப்பூர் மாநகரின் குடிநீர் பிரச்சனை தீர்க்கும் வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து நான்காவது குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சோதனை ஓட்டத்தின் போது திருப்பூருக்கு கொண்டு வரப்பட்ட தண்ணீரை மேயர் தினேஷ்குமார் மற்றும் எம்.எல்.ஏ செல்வராஜ் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர்.


திருப்பூர்: மேட்டுப்பாளையத்தில் இருந்து 4வது குடிநீர் திட்டத்தின் சோதனை ஓட்டத்தின் போது திருப்பூருக்கு வந்த தண்ணீரை மேயர் மற்றும் எம்எல்ஏக்கள் மலர் தூவி வரவேற்றனர்.

திருப்பூர் மாநகரின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கக் கூடிய வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து நான்காவது குடிநீர் திட்டம் கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் சோதனை ஓட்டம் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்த நிலையில் திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு சோதனை ஓட்டமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து நான்காவது குடிநீர் திட்ட குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இது வெற்றிகரமாக திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமலை நகர் மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு கொண்டு வரப்பட்டது.



இதனை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர். திட்டம் முழுமை அடையும் பட்சத்தில் திருப்பூர் மாநகர மக்களுக்கு 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் மிகவும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...