திருப்பூரில் 4வது குடிநீர் திட்ட சோதனை ஓட்டம் - தண்ணீரை மலர் தூவி வரவேற்ற மேயர்!

திருப்பூர் மாநகரின் குடிநீர் பிரச்சனை தீர்க்கும் வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து நான்காவது குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சோதனை ஓட்டத்தின் போது திருப்பூருக்கு கொண்டு வரப்பட்ட தண்ணீரை மேயர் தினேஷ்குமார் மற்றும் எம்.எல்.ஏ செல்வராஜ் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர்.


திருப்பூர்: மேட்டுப்பாளையத்தில் இருந்து 4வது குடிநீர் திட்டத்தின் சோதனை ஓட்டத்தின் போது திருப்பூருக்கு வந்த தண்ணீரை மேயர் மற்றும் எம்எல்ஏக்கள் மலர் தூவி வரவேற்றனர்.

திருப்பூர் மாநகரின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கக் கூடிய வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து நான்காவது குடிநீர் திட்டம் கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் சோதனை ஓட்டம் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்த நிலையில் திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு சோதனை ஓட்டமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து நான்காவது குடிநீர் திட்ட குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இது வெற்றிகரமாக திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமலை நகர் மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு கொண்டு வரப்பட்டது.



இதனை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர். திட்டம் முழுமை அடையும் பட்சத்தில் திருப்பூர் மாநகர மக்களுக்கு 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் மிகவும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...