கோவை மாவட்ட வனச்சரக பகுதிகளில் யானைகள் கணக்கெடுப்பும் பணி - வனச்சரகர்கள், வன ஆர்வலர்கள் பங்கேற்பு!

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் உள்ள அனைத்து வனத்துறை பகுதிகளிலும் 2023 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதில் வனச்சரகர்கள் மற்றும் வன ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



கோவை: கோவை மாவட்ட வனச்சரக பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று நடைபெற்றது.

2023 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் இன்று காலை 6:00 மணியிலிருந்து மாலை 6:00 மணி வரை அனைத்து வனத்துறை பகுதிகளிலும் நடைபெற்றது.

அந்த வகையில் கோவை மாவட்டத்தில் யானை கணக்கெடுக்கும் பணிகள் மதுக்கரை, கோவை, போளுவாம்பட்டி, மேட்டுப்பாளையம் சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் காரமடை உள்ளிட்ட 7 வனச்சரகங்களில் 42 பிளாக்குகளாக யானைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றது.

யானைகள் கணக்கெடுக்கும் பணியில் வனச்சரகர்கள், வனக்காப்பாளர்கள், வன அலுவலர்கள், வன ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவை ஒவ்வொரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரு குழுவில் ஐந்திலிருந்து ஏழு நபர்கள் வரை இணைக்கப்பட்டுள்ளனர்.

யானைகள் கணக்கெடுக்கும் கையேடு ஒவ்வொரு குழுவுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 7 வனச்சரகங்கள் உள்ள கோவை மாவட்ட வனப்பகுதியில் 84 வனச்சரகர்கள், 88 வன ஆர்வலர்கள் மற்றும் வன அலுவலர்கள் இந்த கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.



வனப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் குறித்தும், யானைகள் எந்தெந்த பகுதிகளில் தங்களுடைய வாழ்விடத்தை அமைத்துக் கொண்டுள்ளது என்பது குறித்தும், யானைகள் செல்லக்கூடிய பாதைகளில் யானை சாணங்கள், யானை நீர் குடிக்கக்கூடிய நீர் நிலைகள் என அனைத்தும் கணக்கெடுக்கப்பட்டன.

தமிழக வனப்பகுதியில் இருந்து கேரளா மற்றும் கர்நாடக வனப்பகுதிக்கு சென்று வரக்கூடிய யானைகள் குறித்து துல்லியமாக கணக்கெடுக்கும் விதமாக பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களுடன் வனப்பகுதிக்குள் வனத்துறை காவலர்கள் சென்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...