கோவையில் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி பலியான சோகம்!

கோவை மாவட்டம் பீளமேடு அடுத்த நேரு நகரில் வீடு இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளங்கோ என்பவர் மீது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


கோவை: பீளமேடு அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் இளங்கோ (36). இவர் கோவை பீளமேடு அடுத்த நேரு நகரில் குடும்பத்துடன் தங்கியிருந்து கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இளங்கோ நேரு நகர் அடுத்த ஐானகியம்மாள் நகரில் உள்ள ஒரு வீட்டை இடிக்கும் பணியை மேற்கொண்டு வந்தார்.

அப்போது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி இளங்கோ பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த இளங்கோவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் இளங்கோவை பணி செய்ய வைத்ததாக கட்டிட உரிமையாளர் வெங்கடேஷ், கட்டிட கான்டிராக்டர் மூர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...