கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், கலைமகள் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து தொழிற்நெறி வழிகாட்டும் கண்காட்சி

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் கலைமகள் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து வரும் மார்ச் 14ம் தேதியன்று கலைமகள் கலைக் கல்லூரி வளாகத்தில் தொழிற்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இதில், கோவை மாவட்ட ஆட்சியர் பங்கேற்று வேலை வழிகாட்டும் கையேட்டினை வெளியிட உள்ளார்.

இத்தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் பல்வேறு வேலைவாய்ப்புகள் மற்றும் கல்விகள் தொடர்பான விவரங்கள் பார்வைக்கு வைக்கப்படுவதுடன் வல்லுநர்களால் இவ்விவரங்கள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட உள்ளது.

வேலைவழிகாட்டி கையேட்டில் உயர்கல்வி பற்றிய விவரங்கள், கல்விக்கான உதவி தொகை பெறுதல், உயர்கல்வி வேலைவாய்ப்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டு பயிற்சி, எந்த வேலைவாய்ப்பு பெற என்ன கல்வித் தகுதி தேவை என்பது பற்றிய விவரங்கள் முப்படைகளில் சேர என்ன கல்வித் தகுதி, அதில் உள்ள வாய்ப்புகள் மற்றும் போட்டி தேர்வுகள் பற்றிய விவரங்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்புகள் பற்றிய இணையதள முகவரிகள் அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பொதுவாக வாழ்வில் முன்னேற உரிய தகவல்கள் அளிக்கப்படுகிறது.

எனவே, கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் பங்கேற்று பெருமளவில் பயன்படுத்திக்கொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...