கோவையில் மே.21ம் தேதி டாட்சன்ஸ் மியூசிக் பேரடைஸின் இசைக் கச்சேரி

கோவையில் இசைக்கலைஞர் ஐசக் நெல்சனின் டாட்சன்ஸ் மியூசிக் பேரடைஸின் இசைக் கச்சேரி வரும் 21ம் தேதி, ஆவாரம்பாளையத்தில் உள்ள கோஇந்தியா கலையரங்கில் நடக்க உள்ளது. இந்த இசைக் கச்சேரிக்கு 400 ரூபாய் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவையை சேர்ந்த இசைக்கலைஞர் ஐசக் நெல்சனின் DADSONS Music Paradise (டாட்சன்ஸ் மியூசிக் பேரடைஸ்) இசைக் கச்சேரி வரும் 21ம் தேதி ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள "கோஇந்தியா" கலையரங்கில் நடைபெற உள்ளது.

இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.



அப்போது பேசிய ஐசக் நெல்சன், கடந்த மே ஒன்றாம் தேதி கண்களை கட்டிக்கொண்டு 30 இசைக் கருவிகளை இரண்டு மணி நேரத்திற்குள் வாசித்து உலக சாதனை படைத்துள்ளேன். இதனை வருகின்ற ஜூன் மாதம் கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் கௌரவிக்க உள்ளது. மேலும் இண்டர்நேஷனல் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் குழுமம் அங்கீகரித்துள்ளது. கோவையில் வருகின்ற மே 21ஆம் தேதி ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள கோஇந்தியா கலையரங்கில் டாட்சன்ஸ் மியூசிக் பேரடைஸின் இசைக் கச்சேரி நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

இந்த இசைக் கச்சேரிக்கு 400 ரூபாய் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இசைக் கலைஞர் ஐசக் நெல்சன் புல்லாங்குழல், சாக்ஸபோன், வீணை, கீபோர்ட், கிட்டார், தபேலா, வயலின் என 30 க்கும் மேலான இசைக்கருவிகளை வாசிப்பவர். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறியவர்கள், பெரியவர்கள், தொழில் அதிபர்களுக்கு இசை வகுப்புகளை நடத்தி வருகிறார்.

காந்திபுரம், சரவணம்பட்டி, துடியலூர், சாய்பாபாகாலனி ஆகிய பகுதிகளில் இவரின் இசைப் பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...