கோவையில் முறைகேடாக சிம் கார்டு விற்பனை - 3 பேரை கைது செய்த சைபர் கிரைம்!

கோவை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் போலி முகவரியை பயன்படுத்தி 538 சிம் கார்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்த செந்தில்குமார், ராம்குமார், ராமசுப்பிரமணியம் ஆகியோரையும் கைது செய்தனர்.


கோவை: கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பூங்கா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது42). தனியார் நிறுவன ஊழியராகப் பணியாற்றி வருகிறார். மேலும், இவர் சிம் கார்டுகளை சாலை ஓரத்தில் வைத்து விற்பனை செய்து வந்தார்.

இந்த நிலையில், செந்தில்குமார் போலி முகவரி மற்றும் வேறொருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி 254 சிம்கார்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார். இதை கண்டுபிடித்த தொலைதொடர்பு நிறுவனம் சென்னையில் உள்ள கூடுதல் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் பேரில் வழக்கானது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் போலி முகவரி மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி சிம் கார்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்த செந்தில்குமாரை கைது செய்தனர்.

இதேபோல, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பொள்ளாச்சியில் போலி ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை வைத்து 284 சிம் கார்டுகளை விற்பனை செய்த பொள்ளாச்சி தென்குமாரபாளையத்தைச் சேர்ந்த ராம்குமார்(வயது37), குமரன் நகரை ராமசுப்பிரமணியம் (வயது41) ஆகியோரையும் கைது செய்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...