கோவை அருகே விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞர் - உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம்

கோவை சூலூர் அருகே சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பாலமுருகன் எனும் இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அதன் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.


கோவை: மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது28), இவர் கடந்த 14ஆம் தேதி சூலூர் காங்கேயம்பாளையம் செக் போஸ்ட், அருகே இருசக்கர வாகனத்தில் வந்தபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சையில் இருந்த பாலமுருகனுக்கு மூளை சாவு ஏற்பட்டது.

அவரது உடல் உறுப்புகள் தானம் செய்ய உறவினர்கள் முன்வந்தனர். இதையடுத்து, மூளை சாவு அடைந்த பாலமுருகனின் இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல், இருதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் ஐந்து பேருக்கு தானமாக வழங்க மருத்துவமனை நிர்வாகம், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

அதன்படி இருதயம், நுரையீரல், கல்லீரல் ஆகிய உறுப்புகள் சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு வழங்க விமான மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று கோவை அரசு மருத்துவமனைக்கும், மற்றொன்று சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. விபத்தில் மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல்உறுப்பு தானத்தால், 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

Newsletter

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...