விரைவில் அமலாகிறது ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு கட்டாய ஆதார் எண்

ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படும் திட்டம் விரைவில் அமலாகும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார். இதன் மூலம் போலி அடையாள அட்டைகள் மூலம் பெரிய எண்ணிக்கைகளில் ரயில்வே டிக்கெட்டுகளை புக் செய்வதை தடுப்பதும், மோசடியான டிக்கெட் முன்பதிவுகளையும், ஆள்மாறாட்டத்தையும் தடுக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். மூத்த குடிமக்கள் ரயில் டிக்கெட்டுகளுக்கான சலுகைகளைப் பெற வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆதார் எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது, இதற்கான 3 மாத வெள்ளோட்டமும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 2017-18-க்கான புதிய வர்த்தக திட்டத்தை வெளியிட்ட மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, ஆதார் எண் கட்டாயமாக்கப்படும் திட்டத்துடன், நாடு முழுதும் ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக 6,000 பி.ஓ.எஸ் இயந்திரங்களையும், நாடு முழுதும் 1,000 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களையும் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார். மேலும் பணமற்ற பரிவர்த்தனையை வளர்க்கும் விதமாக ஒருங்கிணைந்த டிக்கெட் ஆப் ஒன்றையும் மே மாதம் அறிமுகம் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

“ஐஆர்சிடிசி இணையத்தில் ஒருமுறை பதிவாக ஆதார் எண் கட்டாயமாக்கப்படவுள்ளது. இதன் மூலம் போலி அடையாள அட்டைகள் மூலம் பெரிய அளவில் டிக்கெட்டுகளை பிளாக் செய்வது தடுக்கப்படும்” என்று மூத்த ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்காக ரயில்வே மென்பொருள் ஒன்றையும் ரயில்வே துறை தயாரித்து வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். மேலும் இந்த புதிய வர்த்தகத் திட்டத்தில் மலைவாசஸ்தலங்களை இணைக்க புதிய சுற்றுலா ரயில்களை அறிமுகம் செய்யவும் முடிவெடுத்துள்ளது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...