மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பெண்ணின் பர்சை திருட முயற்சி - கேரளா பெண்கள் கைது…!

மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலை சங்கர் நகரை சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் நேற்று மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் தனது மனைவியுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 22 வயது இளம்பெண் ஒருவர் ரங்கநாதன் மனைவி கையிலிருந்த பர்சை திருடி தப்ப முயன்றபோது பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பெண்ணிடம் பர்சை திருட முயன்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை சாலை சங்கர் நகரைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் நேற்று மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் தனது மனைவியுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 22 வயது இளம்பெண் ஒருவர், திடீரென ரங்கநாதன் மனைவி கையில் வைத்திருந்த பர்சை திருடிவிட்டு, அதை அருகே இருந்த மற்றொரு 25 வயது பெண்ணிடம் கொடுத்துவிட்டு இருவரும் தப்ப முயன்றனர்.

அப்போது அவர்கள் கூச்சலிடவே அங்கிருந்த பொதுமக்கள் தப்ப முயன்ற இரண்டு பெண்களையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் மேட்டுப்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் பிடிபட்ட இருவரும் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர்கள் என்பதும், கோவையில் பொம்மை விற்பனை செய்து கொண்டு இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...