சூலூர் நீர்நிலைப் பகுதியில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் மணியில் ஈடுபட்ட பொது மக்கள் மற்றும் தன்னார்வலர்கள்


சூலூர் நீர் நிலை பகுதிகளில் வளர்ந்துள்ள உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் பொதுமக்கள், பொது நல அமைப்புகள் ஈடுபட்டுள்ளனர்.



சீமை கருவேல மரங்கள் நீலத்தடி நீர் அதிகம் உருஞ்சுவதால் அதனை அகற்ற வேண்டும் என சென்னை உயர்ந்திமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்யபட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு இதனை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.



இதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

அதன்படி கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சூலூர் நீர் நிலை மேலான்மை குழு அமைப்புகள் என 25 குழுக்கள் கொண்ட பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் அலோசனை கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



இக்கூட்டத்தில் நீர் நிலை பகுதிகளில் வளர்ந்துள்ள மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக இன்று காலை சூலூர் பகுதிகளில் உள்ள மரங்களை அகற்றும் பணி துவங்கியது. இப்பணிகளை ஆர்வி.எஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் குப்புசாமி துவக்கி வைத்தார்.

12 ஜே சி பி 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு சூலூர் குளம், அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள குட்டைகள் ஆகிய பகுதிகளில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணியில் சூலூர் பகுதி அனைத்து அரசியல் கட்சியினர், பொது நல அமைப்பினர், பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அனைத்து நில நீர் நிலை மேலான்மை குழுவினர் கூறும்போது தொடர்ந்து சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடரும் என தெரிவித்தனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...