வருவாய் அலுவலர்கள் பணியிடமாற்றம் - கோவை மாநகராட்சி துணை ஆணையருக்கு பதவி உயர்வு!

கோவை மாவட்ட வருவாய் அலுவலர் சென்னை வெளிவட்ட சாலை தனி மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்ட வருவாய் அலுவலராக மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை: கோவை உட்பட 25 மாவட்டங்களில் உள்ள வருவாய் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்ட வருவாய் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் வருவாய் அலுவலர்கள் 25 பேர் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.



கோவை மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த பி.எஸ்.லீலா அலெக்ஸ், சென்னை வெளிவட்ட சாலை தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரது பதவிக்கு கோவை மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா பதவி உயர்வு அளிக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

அதேபோல் பெருநகர சென்னை நகராட்சி மண்டல அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், கோவை மாவட்ட தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) முதுநிலை மண்டல மேலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...