கோவையில் வீடு புகுந்து 6.5 பவுன் நகை திருட்டு - போலீசார் விசாரணை

கோவை வேலாண்டிபாளையம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் சஞ்சீவ்குமார் சார்தா(55). இவர் குடும்பத்தினருடன் உறங்கி கொண்டிருந்த போது வீட்டில் நுழைந்த மர்மநபர் 6.5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.42 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றார்.



கோவை: வேலாண்டிபாளையத்தில் வீட்டில் புகுந்து தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். 

கோவை வேலாண்டிபாளையம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் சஞ்சீவ்குமார் சார்தா(55). இவர் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் குடும்பத்தினருடன் வீட்டில் உள்ள மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, அவரது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து அடையாளம் தெரியாத மர்பநபர் ஒருவர் ஓடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 6.5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.42 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...