சென்னையில் இருந்து கோடை விடுமுறைக்கு கோவை வந்த ஆட்டிசம் குறைபாடுள்ள 13 வயது சிறுவன் மாயம்…!

கோவை சிங்காநல்லூர் சிக்னலில் நேற்று காலை முதல் யுவன் என்ற 13 வயது சிறுவனை காணவில்லை - யாரேனும் கண்டால் தொடர்பு கொள்ளவும். மகாலட்சுமி: +91-89397-88969, தரணி: +91-97893-05270.

கோவை: சென்னை அயப்பாக்கம் ராஜம்மாள் நகர் தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி (42), இவரது மகன் யுவன் கதிரவன் (13), ஆர்ட்டிசம் குறைபாடுள்ள சிறுவன் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில் மகாலட்சுமி தனது மகன் யுவன் கதிரவனுடன் கோடை விடுமுறையை முன்னிட்டு கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்க்காக வந்தனர்.

மேலும் கோவை மசக்காளிபாளையம் சின்னசாமி லேயவுட் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தனர். 

இந்த நிலையில் வீட்டிலிருந்த சிறுவன் யுவன் கதிரவன் திடீரென மாயமானார். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்ல.

இதையடுத்து மகாலட்சுமி சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆர்ட்டிசம் பாதிப்புடன் மாயமான சிறுவனை தேடி வருகின்றனர். 

சிறுவனின் புகைப்படங்களும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வாட்சப் குழுக்களிலும் பகிரப்பட்டு வருகிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...