கோவையில் சிறப்பு சொத்து வரி திருத்த முகாம் - மேயர், மாநகராட்சி ஆணையர் துவக்கி வைத்தனர்!

கோவை மாநகராட்சி சார்பில் சரவணம்பட்டி பகுதியில் 4, 10, 11 மற்றும் 21 ஆகிய 4 வார்டுகளுக்கு உட்பட்ட மக்களுக்கான சிறப்பு சொத்து வரி திருத்த முகாம் இன்று நடைபெற்றது. இதனை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் துவக்கி வைத்து மக்களுக்கு சொத்து வரி திருத்த புத்தகங்களை வழங்கினர்.



கோவை: கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் நடைபெற்ற சிறப்பு சொத்து வரி திருத்த முகாமை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் துவக்கி வைத்தனர். 



கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் சரவணம்பட்டி பகுதியில் வார்டு எண் 4, 10, 11, 21 ஆகிய நான்கு வார்டுகளுக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களுக்காக சிறப்பு சொத்து வரி திருத்த முகாம் நடைபெற்றது.



இம்முகாமில் சொத்து வரி மாற்றம் செய்தல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



இந்த முகாமை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துவக்கி வைத்து கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சொத்து வரி திருத்த புத்தகங்களை வழங்கினர். தொடர்ந்து இம்முகாம் அப்பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி துணை ஆணையாளர் சிவக்குமார், வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் மாமன்ற உறுப்பினர்கள் கதிர்வேலுசாமி, பூங்கொடி, சிரவை சிவா, உதவி ஆணையர் மோகனசுந்தரி உதவி வருவாய் அலுவலர் மதிவண்ணன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.



இதுபோன்ற சிறப்பு சொத்துவரி முகாம்கள் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...