வால்பாறையில் இன்று கோடை விழா தொடக்கம் - 3 நாட்கள் நடக்கிறது!

வால்பாறையில் நடப்பாண்டு கோடை விழா இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ள நிலையில், இன்று நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா மற்றும் நகர மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து, தாவரவியல் பூங்காவை பார்வையிட்டனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கோடை விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. 

கோவை மாவட்டம் வால்பாறையில் கோடை விழாவானது இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற கோடை விழாவின் துவக்க நிகழ்ச்சியில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா மற்றும் நகர மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி ஆகியோர் கலந்து கொண்டு கொடி ஏற்றி கோடை விழாவை துவக்கி வைத்தனர்.



கோடை விழா நடைபெறும் வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது. கோடை விழாவின் நுழைவாயில் பகுதியில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. ஊட்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜேர்பார், ரோஜா, டென் ரோ பியம், புளூடெய்சி, பல வண்ண கார்னேசன் உள்பட 6,500 மலர்களால் இந்த மலர் கண்காட்சி நடைபெறுகிறது. 

இதில் செல்பி ஸ்பாட், வண்ணத்து பூச்சி, மிக்கி மவுஸ் ஆகியவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மேலும் 250 காய்கறிகள் மூலம் வரையாடு, கோடைவிழா சின்னமான இருவாச்சி பறவை, சிங்கவால் குரங்கு ஆகியவற்றின் உருவங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. 



சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு படகுசவாரி, சார் ஆட்சியர் பிரியங்கா மற்றும் நகராட்சி தலைவர் அழகு சுந்தர வள்ளி மற்றும் நகர மன்ற துணை தலைவர் செந்தில் குமார் ஆகியோர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.



பின்னர் தாவரவியல் பூங்காவை பார்வையிட்டனர். 

மேலும் இங்கு வனத்துறை சார்பில் இயற்கை பொருட்களை கொண்ட அரங்கம் அமைத்து புலி, சிறுத்தை, போன்ற வன விலங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் பரதநாட்டியம், யோக நடனம், கரகாட்டம், காவடி ஆட்டம், படுகர் இன நடனம், முருகன் வள்ளி கும்மி பாட்டு, பழங்குடியினர் நடனம், வாத்தியம், காவல்துறையின் நாய்கள் சகாசம், நாய்கள் கண்காட்சி, டீ தூள் தயாரிப்பு போட்டி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

தாவரவியல் பூங்கா பராமரிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. கோடை விழாவின் நிறைவு நாளில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...