வருமான வரித்துறை அதிகாரிகள் மீது ஆளுங்கட்சியினர் தாக்குதல் நடத்துவது ஏற்புடையது அல்ல - ஜி.கே.வாசன் கண்டனம்!

பல்லடம் அருகே காரணம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், வருமான வரித்துறை சோதனை என்பது புதிதல்ல, வழக்கமான ஒன்றுதான். ஆளுங்கட்சியினர் அதிகாரிகள் மீது தாக்குதலில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல என கண்டனம் தெரிவித்தார்.



திருப்பூர்: வருமான வரித்துறை அதிகாரிகள் மீது ஆளுங்கட்சியினர் தாக்குதலில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் உள்ள கூப்பிடு பிள்ளையார் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வருகை தந்தார். 

சாமி தரிசனம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, 



வருமான வரித்துறை சோதனை என்பது புதிதல்ல, வழக்கமான ஒன்றுதான். ஆளுங்கட்சியினர் அதிகாரிகள் மீது தாக்குதலில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல. 

ஆளுங்கட்சியினரின் பணபலமும் அதிகார பலமும் வெளிவருவதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதாரங்களின் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களை தடுக்கவோ அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோ யாருக்கும் அதிகாரம் இல்லை. உண்மை நிலை என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

முதல்வரின் மலேசியா சுற்றுப்பயணம் வெறும் விளம்பரத்திற்காக மட்டும் இருக்கக் கூடாது. தமிழகத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் இருக்க வேண்டும். காரணம்பேட்டை அருகே பத்தாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் உள்ள பேருந்து நிலையத்தை ஜவுளி பூங்காவாக மாற்றி அமைக்க வேண்டும்.

முறையான சட்ட விதிகளை பின்பற்றி இயங்கும் கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கினால் மட்டுமே கட்டுமான தொழில் வளர்ச்சி அடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...