மோசடி கும்பலின் வங்கி கணக்குகளில் இருந்த ரூ.2.39 கோடி முடக்கம் - கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அதிரடி!

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவர் ஆன்லைன் மோசடி கும்பலின் வலையில் சிக்கி, ரூ.23.82 லட்சத்தை இழந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த சைபர் கிரைம் போலீசார். மோசடி நபர்களின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.2.39 கோடியை முடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: ஆன்லைன் மோசடி கும்பலின் வங்கி கணக்கில் உள்ள ரூ.2.39 கோடியை கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் இணையதளத்தில் பகுதி நேர வேலை தேடி வந்தார். அவருக்கு சமூக வலைதளமான டெலிகிராம் செயலியில் இருந்து ஒரு லிங்க் வந்தது. அதை கிளிக் செய்த போது இணையத்தில் சிறிய வேலைகளை செய்தால் அதற்கு நிறைய பணம் கிடைக்கும் என்று ஆசை காட்டியுள்ளனர். 

அதனை நம்பி சிறிய அளவில் முதலீடு செய்த அவருக்கு பணமும் வந்தது. இதையடுத்து நாங்கள் சொல்வது போல் நிறைய பணம் முதலீடு செய்தால் இன்னும் பல மடங்கு லாபம் கொட்டும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதை நம்பிய ராஜா ரூ.23.82 லட்சத்தை டெலிகிராம் செயலின் மூலம் முதலீடு செய்தார். 

ஆனால் அதன் பிறகு அவருக்கு எந்த பணமும் வரவில்லை, இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில், எஸ்.பி.பத்ரிநாராயணன் உத்தரவின் பெயரில் விசாரணை நடத்திய போலீசார் மோசடி பேர்வழிகளின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர். 

அந்த வங்கி கணக்குகளில் பலரிடமிருந்து மோசடியாக பெறப்பட்ட ரூ.2.39 கோடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தத் தொகையை அப்படியே முடக்கி வைக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட ராஜாவுக்கு உரிய பணத்தை பெற்று தர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், பொதுமக்கள் மோசடி கும்பலின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற கூடாது என போலீசார் எச்சரிக்கின்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...