கோவையில் இளம் பெண்ணை கத்தியால் குத்திய மாநகராட்சி தூய்மை பணியாளர் கைது!

கோவை குனியமுத்தூர் அருகேயுள்ள மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்த சதீஸ் (30) என்பவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் பழகி வந்த நிலையில், அந்த பெண்ணுக்கு வரன் பார்த்து வந்ததால் ஆத்திரமடைந்த சதீஸ், இளம்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற நிலையில், அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே இளம் பெண்ணை கத்தியால் குத்திய மாநகராட்சி தூய்மை பணியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குனியமுத்தூர் அருகேயுள்ள மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் சதீஸ் (30). இவர் கோவை மாநகராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். மேலும் இவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. 

இவரிடம் அதே பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் நட்பாக பழகி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நட்பாக பழகிவந்த 27 வயது பெண்ணிற்கு அவரது வீட்டில் திருமணத்திற்கு வரன் பார்த்து வந்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த சதீஸ், பெண்ணை திருமணம் செய்ய கூடாது என வற்புறுத்தி சண்டையிட்டு வந்துள்ளார்.

இதனிடையே, நேற்று அப்பெண்ணின் பிறந்த நாளை முன்னிட்டு சதீஸ் அவரை கே.ஜி சாவடி அருகே உள்ள ரொட்டிகவுண்டன்புதூர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அப்பெண்ணிடம் வேறு யாரையும் திருமணம் செய்யக்கூடாது என கூறி மிரட்டியதாக தெரிகிறது.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த சதீஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளம்பெண்ணை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவரை சதீஸ் மதுக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளார். 

அங்கிருந்த மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து விட்டு, முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரை செய்தனர். இதையடுத்து அங்கு அழைத்துச் சென்று அனுமதித்த சதீஸ் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அரசு மருத்துவமனை அளித்த தகவலின் பேரில், கே.ஜி.சாவடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரை கத்தியால் குத்தி தப்பிய சதீஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...