கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து திருடிய நபர் கைது - போலீசார் விசாரணை!

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் மற்றும் காணிக்கைகளை திருடிச்சென்ற நிலையில், புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த பணம் மற்றும் இரும்பு கம்பி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.



கோவை: கோவை கோனியம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை பெரிய கடை வீதியில் கோவையின் காவல் தெய்வமான பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோயில் அமைந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர் கோவில் வளாகத்தினுள் நுழைந்து மேற்கு பக்கம் அமைந்துள்ள ஆதி கோனியம்மன் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த உண்டியலில் இருந்த பணம் மற்றும் காணிக்கைகளை திருடிச் சென்றார். 

இச்சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி ஆய்வாளர் சிவன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் கோவில் உண்டியலை உடைத்து கைவரிசை காட்டிய திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சேகர் (எ) சதீஷ் (32), என்பவரை போலீசார் கைது செய்தனர். 

இதனையடுத்து, அவரிடமிருந்த பணம் மற்றும் திருட பயண்படுத்திய இரும்பு கம்பியை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட சதீஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...