கோவையில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் - ஆட்சியர் துவங்கி வைத்தார்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் மஞ்சப் பை வழங்கும் தானியங்கி இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதனை மக்கள் பயன்பாட்டுக்காக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று தொடங்கி வைத்தார்.



கோவை: கோவையில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று தொடங்கி வைத்தார். 

தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை உபயோகிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து மாவட்டந்தோறும் மஞ்சப்பைகள் விநியோகம் செய்யப்பட்டு அதனை உபயோகிப்பதற்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி துவக்கி வைத்தார். 



இது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக கோவையில் வைக்கப்பட்டுள்ள முதல் தானியங்கி இயந்திரமாகும். இதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.புரம் மாற்றும் சிங்காநல்லூர் பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகள் உட்பட 5 இடங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இந்த தானியங்கி இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளன. 

இதுதவிர கோவை மாநகராட்சிக்கு 5 இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 5 இயந்திரங்களை பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...