கோவையில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி!

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இன்றைய தினம் வெப்பச்சலனம் காரணமாக கடந்த 2 நாட்களாக லேசான மழை பெய்து வந்த நிலையில், இன்று பிற்பகல் இடையர்பாளையம், கோவில்மேடு, டிவிஎஸ் நகர் ஆகிய பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.



கோவை: கோவை மாவட்டத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

வெப்ப சலனம் காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றைய தினம் சூலூர் பகுதியில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.



இந்நிலையில் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மதியத்திற்கு மேல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக ரயில் நிலையம், பூ மார்க்கெட், உக்கடம், இடையர் பாளையம் ஆகிய மாநகர பகுதிகளிலும் கணுவாய், தடாகம், சோமையம்பாளையம் ஆகிய புறநகர் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. 



இந்நிலையில் இடையர்பாளையம், கோவில்மேடு, டிவிஎஸ் நகர் ஆகிய பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்தனர். 



காலையிலிருந்து வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென பெய்த மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...