தமிழகத்தில் லஞ்ச லாவன்யம் தலை விரித்தாடுகிறது - பாஜக மாநில துணைத் தலைவர் கனகசபாபதி குற்றச்சாட்டு!

கோவை வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கனகசபாபதி, இன்பச் சுற்றுலா செல்வதற்காகவே முதல்வர் வெளிநாட்டு பயணம் செய்கிறார் என்றும், தமிழகத்தில் லஞ்ச லாவன்யம் தலை விரித்தாடுகிறது எனவும் குற்றம் சாட்டினார்.



கோவை: இன்பச் சுற்றுலா செல்வதற்காகவே முதல்வர் வெளிநாட்டு பயணம் செய்வதாக பாஜக மாநில துணைத் தலைவர் கனகசபாபதி குற்றம் சாட்டியுள்ளார். 

பிரதமர் மோடியின் 9 வருட ஆட்சியின் சாதனை குறித்து கோவை வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இச்செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாஜக மாநில துணைத் தலைவர் கனகசபாபதி பேசியதாவது, பிரதமர் மோடி தலைமையிலான அரசு அளப்பரிய சாதனை செய்திருக்கிறது. 5 வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியிருக்கிறது. 

உலக பொருளாதாரத்தில் வெளிச்சம் தரக்கூடிய பகுதி என இந்தியாவை குறிப்பிட்டு வருகின்றனர். பப்புவா நியூ கினியா பிரதமர் நமது பிரதமரின் காலை தொட்டு வணங்கினார். உலகம் முழுவதும் பிரதமரின் பெயர் பெரிய அளவிற்கு வந்துள்ளது. 

உலக அளவில் பிற நாடுகளுக்கு உதவி செய்வது துணிச்சலாக முடிவெடுப்பது உள்ளிட்டவை பிரதமரின் ஆளுமையை காட்டுகின்றன. 13 கோடி பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு, முத்ரா திட்டத்தின் கீழ் கடனுதவி உள்ளிட்ட சாதனைகளை மூடிய அரசு செய்திருக்கிறது. மே 30 தொடங்கி ஜுன் 30 வரை பயனாளிகளை சந்திக்கும் நிகழ்ச்சியை பாஜக நடத்த உள்ளது. 

கோவையின் எல்லா பகுதிகளிலும் மக்களோடு மக்களாக சென்று மோடியின் சாதனைகளை பிரச்சாரம் மூலம் எடுத்துக் கூற உள்ளோம். நாடு பெரிய முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். 

ஜப்பானுக்கு தமிழக முதல்வர் சென்றது என்பதை பிரதமரின் வெளிநாட்டு பயணத்தை ஒப்பிடக்கூடாது. கடந்த முறை துபாய் சென்ற தமிழக முதலமைச்சர் என்ன முதலீட்டை கொண்டு வந்தார். இன்பச் சுற்றுலா செல்வதற்காகவே முதல்வர் வெளிநாட்டு பயணம் செல்கிறார். 

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் விமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த முயன்ற போது வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்த வரை சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் லஞ்ச லாவன்யம் தலை விரித்தாடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...