சூலூரில் நான் கடவுள் பட பாணியில் இறந்தவர் உடல் மீது அமர்ந்து பூஜை செய்த அகோரி சாமியார் - பரபரப்பு!

சூலூர் அடுத்த குரும்ப பாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது நண்பரான அகோரி சாமியார் ஒருவர், நான் கடவுள் பட பாணியில் அவரது உடல் மீது அமர்ந்தபடி சிவபூஜையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.



கோவை: சூலூரில் இறந்தவர் உடல் மீது அமர்ந்து அகோரி சாமியார் ஒருவர் சிவ பூஜை நடத்தி இறுதிச்சடங்கு செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள குரும்ப பாளைத்தை சேர்ந்தவர் மணிகண்டன். ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தனது மனைவியுடன் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது.

குடும்ப பிரச்சனையால் மனவேதனையில் இருந்த மணிகண்டன் நேற்றைய தினம், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மணிகண்டனுடன் சிறுவயது முதலே நண்பராக பழகி வந்த திருச்சியை சேர்ந்த அகோரி சாமியார், அவரது மரண செய்தி கேட்டு சூலூர் வந்து இறுதிச் சடங்கில் பங்கேற்றார்.



அப்போது காசியில் அகோரிகள் பிணத்தின் மீது அமர்ந்து இறுதி சடங்குகள் மேற்கொள்வதைப் போல மணிகண்டனின் உடல் மீது அமர்ந்த சாமியார், அகோரிகள் புடை சூழ சிவ வாத்தியங்களுடன் காலபைரவர் பூஜை நடத்தி இறுதி சடங்கு செய்தார்.



இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் மயானத்துக்கு வந்து அகோரி சாமியாரின் சிவ பூஜையை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...