பொள்ளாச்சி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது - 2.80 கிலோ கஞ்சா பறிமுதல்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஹக்கீம் (39) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 2.80 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.



கோவை: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக ஆனைமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் ஆனைமலை போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஆனைமலை ஆற்றுப்பாலம் அருகே கஞ்சாவுடன் வலம் வந்த ஹக்கீம் (39) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 2.80 கிலோ கஞ்சா, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பொள்ளாச்சியை சேர்ந்த ஹக்கீம் ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை வாங்கி வந்து அதனை ஆனைமலை பகுதியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...