போத்தனூர் அருகே குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் கைது - 471 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

போத்தனூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த சாரமேடு பகுதியை சேர்ந்த அப்துல் கரீம்(45) என்பவரை கைது செய்த போலீசார், 471 கிலோ அளவிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.



கோவை: போத்தனூர் அருகே தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் கரும்புக்கடை சாரமேடு ராஜீவ் நகரை சேர்ந்த முகமது அனிபா என்பவரின் மகன் அப்துல் கரீம்(45). இவர் அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு பீடி, சிகரெட் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். 

இந்நிலையில் அவர், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போத்தனுர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது காரில் சோதனை செய்த போது புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து காரில் இருந்த 471 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார். அப்துல்கரீமை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...