கனிமவளங்களை பாதுகாக்க கோரி கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் வாகன பிரச்சாரம்!

கோவையில் இருந்து கேரளா மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கும் கனிம வளங்கள் சட்டவிரோதமாக கடத்தி செல்லப்படுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கனிம வளங்களை பாதுகாக்க கோரி கோவை செட்டிபாளையம் பகுதியில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

கோவையின் கனிம வளங்களை பாதுகாக்க கோரியும், கனிம வளங்கள் எடுத்துச் செல்ல மிகப்பெரிய அளவில் வெளிப்படையான மாமுல் வசூல் செய்யப்படுவதை தடுத்து நிறுத்த கோரியும், மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக வாகன ஒலிபெருக்கி பிரச்சாரம் செய்ய மாவட்ட காவல்துறையிடம் அந்த இயக்கத்தினர் மனு அளித்தனர்.

ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கோவை செட்டிபாளையம் பகுதியில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கனிம வளங்களை பாதுகாக்க கோரி பிரச்சார பயணத்தை துவங்கினர். 



இயக்கத்தின் தலைவர் வே.ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சார பயணத்தில் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது பிரச்சான பயணத்தில் பேசிய வே.ஈஸ்வரன் கூறியதாவது, கோவை மாவட்டத்தில் செட்டிபாளையம், வாளையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனிம வளங்கள் அதிக எடுக்கப்பட்டு கேரளாவிற்கும், பிற மாவட்டங்களுக்கும் அதிகளவு எடுத்துச் செல்லப்படுகிறது. 

ஒரு சில இடங்களில் விதிமீறல்களுடன் கனிமவள கொள்ளை நடைபெற்று வருகிறது. அதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தவில்லை. உடனடியாக கோவையில் உள்ள கனிம வளங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் கனிம வளங்களை சட்டவிரோதமாக கடத்திச் செல்ல நடைபெறும் வசூல் வேட்டைகளையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...