கனிமவளங்களை பாதுகாக்க கோரி கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் வாகன பிரச்சாரம்!

கோவையில் இருந்து கேரளா மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கும் கனிம வளங்கள் சட்டவிரோதமாக கடத்தி செல்லப்படுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கனிம வளங்களை பாதுகாக்க கோரி கோவை செட்டிபாளையம் பகுதியில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

கோவையின் கனிம வளங்களை பாதுகாக்க கோரியும், கனிம வளங்கள் எடுத்துச் செல்ல மிகப்பெரிய அளவில் வெளிப்படையான மாமுல் வசூல் செய்யப்படுவதை தடுத்து நிறுத்த கோரியும், மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக வாகன ஒலிபெருக்கி பிரச்சாரம் செய்ய மாவட்ட காவல்துறையிடம் அந்த இயக்கத்தினர் மனு அளித்தனர்.

ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கோவை செட்டிபாளையம் பகுதியில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கனிம வளங்களை பாதுகாக்க கோரி பிரச்சார பயணத்தை துவங்கினர். 



இயக்கத்தின் தலைவர் வே.ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சார பயணத்தில் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது பிரச்சான பயணத்தில் பேசிய வே.ஈஸ்வரன் கூறியதாவது, கோவை மாவட்டத்தில் செட்டிபாளையம், வாளையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனிம வளங்கள் அதிக எடுக்கப்பட்டு கேரளாவிற்கும், பிற மாவட்டங்களுக்கும் அதிகளவு எடுத்துச் செல்லப்படுகிறது. 

ஒரு சில இடங்களில் விதிமீறல்களுடன் கனிமவள கொள்ளை நடைபெற்று வருகிறது. அதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தவில்லை. உடனடியாக கோவையில் உள்ள கனிம வளங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் கனிம வளங்களை சட்டவிரோதமாக கடத்திச் செல்ல நடைபெறும் வசூல் வேட்டைகளையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...