திருமணமாகி ஒரு மாதத்திற்குள் மனைவி கொலை - கணவர் உட்பட மூவர் கைது!

கோவை மத்துவராயபுரம் பகுதியில் திருமணமாகி ஒரு மாதத்திற்குள், குடும்பத் தகராறில் மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய கணவர் சஞ்சய் (20), உடந்தையாக இருந்த அவரது தாய் பக்ருநிஷா மற்றும் தந்தை லட்சுமணன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.



கோவை: கோவை அருகே மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் உடந்தையாக இருந்த அவரது தாய், தந்தை ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை மத்துவராயபுரம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (20). இவர் தனது கல்லூரியில் உடன் படித்த செல்வபுரம் பகுதியை சேர்ந்த ரமணி (20) என்ற பெண்ணை காதலித்து கடந்த 6 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். 



பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு இருந்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து, சஞ்சய் வீட்டில், சஞ்சயின் தாய், தந்தையுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், சஞ்சய் கல்லூரியில் உடன் படிக்கும் மற்றொரு பெண்ணிடம் செல்போனில் பேசியது தொடர்பாக மனைவி ரமணி கேட்டுள்ளார். 

இந்நிலையில், கணவன் - மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சஞ்சய் தனது மனைவி ரமணியின் கழுத்தை நெறித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், கொலையை மறைப்பதற்காக தனது அம்மா, அப்பாவுக்கு போன் செய்ததையடுத்து, இருவரும் வீட்டுக்கு வந்து இறந்து போன ரமணியின் உடலில் அணிந்திருந்த உடையை அகற்றியுள்ளனர். 

பின்னர் சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் பொடியை கரைத்து உடல் முழுவதும் பூசி குளிக்க வைத்து துணிகளை மாற்றிவிட்டு சாணிப்பவுடர் குடித்தது போல மற்றவர்களை நம்பவைக்க, அக்கம்பக்கம் உள்ளவர்களை கூவி அழைத்து புளியைக் கரைத்து ஊற்றியும் உள்ளனர். 

பின்பு ஆலாந்துறை தனியார் மருத்துவமனைக்கு ரமணி உடலை தூக்கிசென்று மருத்துவரிடம் காண்பித்து, பின்பு பூலுவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு அலுவலில் இருந்த பெண் மருத்துவர் ரமணி உடலை பரிசோதித்த பின்னர் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார். 

இதனையடுத்து, மருத்துவமனையில் இருந்து காருண்யா நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது ரமணி இறந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். 

சஞ்சய் தனது தந்தை, தாய் உதவியுடன் ரமணி தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடி உடல் அடக்கம் செய்துள்ளனர். இந்நிலையில், ரமணியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ரமணி தந்தை அளித்த புகாரில் காருண்யா நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில் ரமணி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 29ஆம் தேதி சம்பவம் நடந்த போது முதலில் சந்தேக மரணம் பதிவு செய்யப்பட்டு, வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்த நிலையில், விசாரணைக்கு பின் கொலை வழக்காக மாற்றப்பட்டது. 

தொடர்ந்து, கணவர் சஞ்சய், மாமியார் பக்ருநிஷா, மாமனார் லட்சுமணன் ஆகியோரை காருண்யா நகர் காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

திருமணமாகி ஒரு மாதத்திற்குள் மனைவியை கணவனே கொலை செய்து விட்டு நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...