கோவையில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் - பரபரப்பு!

சுந்தராபுரம் அருகேயுள்ள குருசாமி பிள்ளை வீதியை சேர்ந்த அப்துல் ஜபாரின் வீட்டிற்கு அடிக்கடி போலீஸ் வருவதால், வாடகை வீட்டு உரிமையாளர் காலி செய்ய சொன்னதால், மனமுடைந்த அப்துல் ஜபார், சாரதா மில் அருகேயுள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் சுந்தராபுரம் அருகே செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. 

கோவை போத்தனூர் அடுத்த குருசாமி பிள்ளை வீதியை சேர்ந்தவர் அப்துல் ஜபார் (45). ஆட்டோ ஓட்டுனரான இவரது மகன் ஹாரூன் பாஷா (24) என்பவர் மீது ரேஷன் அரிசி கடத்தல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

இதனால் அடிக்கடி வழக்கு விசாரணைக்காக போலீசார் அப்துல் ஜபாரின் வீட்டிற்கு வந்து சென்றதாக தெரிகிறது. போலீசார் அடிக்கடி வருவதால் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். 

இதில் மனமுடைந்த அப்துல் ஜபார் சுந்தராபுரம் சாரதா மில் சந்திப்பில் உள்ள செந்தில்குமார் என்பரது வீட்டின் மேலே இருந்த செல்போன் டவர் மீது ஏரி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். 

தகவல் அறிந்து வந்த போத்தனூர் உதவி ஆய்வாளர் ஜெசிஸ் உதயராஜ், ஜபாருடன் நீண்ட நேரம் பேசி சமாதானம் செய்து அவரை கீழே இறக்கி, எச்சரித்து அனுப்பி வைத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...