கோவை எஸ்.பி தலைமையில் காவலர்களுக்கான குறைதீர்ப்பு முகாம்!

கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் தலைமையில் கோவை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் காவலர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், சட்டம் ஒழுங்கு, ஆயுதப்படை உள்ளிட்ட காவலர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக எஸ்.பி-யிடம் அளித்தனர்.



கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.



கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், தலைமையில் கோவை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர் முதல் சார்பு ஆய்வாளர் வரை உள்ள காவல் துறையினருக்கு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. 



இக்குறைதீர்க்கும் முகாமில் காவல்துறையினர் சுமார் 183 பேரிடம் காவல் கண்காணிப்பாளர் குறைகளைக் கேட்டறிந்தும், அவர்களிடம் இருந்து குறைதீர்க்கும் மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.



அம்மனுக்களை பெற்றுக் கொண்டு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அமைச்சுப் பணியாளர்களுக்கு உத்தரவு வழங்கினார். 



மேலும், மனுக்கள் மீது துரிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தெரிவித்தார்.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...