மாற்றுத்திறனாளி கைப்பந்து வீராங்கனைக்கு கோவை டி.ஐ.ஜி பாராட்டு!

நேபாள நாட்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச ஓபன் காத்மாண்டு அமர்வு கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் 2ஆம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு கோவை டிஐஜி விஜயகுமார் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.



கோவை: நேபாள நாட்டில் நடைபெற்ற மாறுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு கோவை டிஐஜி விஜயகுமார் பாராட்டினார். 

நேபாள நாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச ஓபன் காத்மாண்டு அமர்வு கைப்பந்து சாம்பியன்ஷிப் (International Open Kathmandu Sitting Volleyball Championship) போட்டி சமீபத்தில் நடைபெற்றது. 

இந்த போட்டியில், கோவை சரக அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டு, கோவையில் உள்ள இந்தியா பாரா வாலிபால் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் இந்திரா என்பவர் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். 

இதனை அறிந்த கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார், வெற்றி பெற்ற மாற்றத்திறனாளி கைப்பந்து வீராங்கனையை பாராட்டும் விதமாக கோவை காவல் சரக அலுவலகத்தில் வைத்து பாராட்டு நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...