உதகை அருகேயுள்ள நியாயவிலை கடைகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு!

நீலகிரி மாவட்டம் உதகை, நொண்டிமேடு, பாம்பே கேசில் பகுதிகளில் உள்ள கூட்டுறவு நிறுவனம், நியாய விலை கடைகளில், மாவட்ட ஆட்சியர் அம்ரித் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரிசி, சர்க்கரை உள்ளிட்டவற்றின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.



நீலகிரி: உதகை அருகேயுள்ள பல்வேறு நியாய விலை கடைகளில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் முக்கிய பங்காற்றி வரும் பொது விநியோக திட்டத்தினை வலுப்படுத்துவதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு நேரடியாக உதவ முடியும் என்பதன் அடிப்படையில் தமிழக அரசு நியாய விலை கடைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. 

இந்நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் உதகை, நொண்டிமேடு மற்றும் பாம்பே கேசில் பகுதிகளில் உள்ள கூட்டுறவு பண்டகசாலை மற்றும் நியாய விலை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது, விற்பனை முனைய எந்திரத்தில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள், விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, மீதமுள்ள அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, ராகி, பாமாயில், பொருட்கள் இருப்பு மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு ஆகியவற்றினை நேரில் பார்வையிட்டார்.

மேலும், அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியல் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் காட்சி படுத்தப்பட்டு உள்ளதா? என்பதனையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, உதகை வட்டாட்சியர் ராஜசேகர், நியாய விலை கடை பணியாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...