சக்திமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா - பால்குடம் சுமந்து வந்த பக்தர்கள்!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சக்திமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருநாள் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பால், பச்சரிசி மாவு, பஞ்சாமிர்தம், திருநீறு அபிஷேகம் செய்து பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.



நீலகிரி: கோத்தகிரி அருகேயுள்ள சக்திமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருநாளையொட்டி பக்தர்கள் பால்குடங்களை சுமந்து வந்து சாமி தரிசனம் செய்தனர். 

முருக பெருமான் பிறந்த நாள் பெருவிழாவாக வைகாசி விசாக திருநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் திருவிழா கொண்டாட்டங்கள் தடபுடலாக நடைபெறுவது வழக்கம். 

வைகாசி விசாகத்தையொட்டி பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்துச்சென்று முருக பெருமானை வணங்குவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி சக்திமலை முருகன் கோவிலில் வைகாசி விசாகம் கொண்டாடப்பட்டது. 

அப்போது டானிங்டன் விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் 108 பால் குடங்களை ஏந்தி ஊர்வலமாக சென்று சக்திமலைக்கு வந்தனர். அங்கு அவர்கள் சுவாமிக்கு நல்லெண்ணெய், பால், பச்சரிசி மாவு, பஞ்சாமிர்தம், திருநீறு அபிஷேகம் செய்து பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். 

கோவிலில், ஐந்து முக விளக்கு ஏற்றி, அதில் 5 வித எண்ணை ஊற்றி, 5 வகை புஷ்பம் சமர்ப்பித்து, சுவாமிக்கு 5 வகை பச்சரிசி மாவு, பஞ்சாமிர்தம், பழங்கள் மற்றும் கந்தனுக்கு பிடித்த அப்பமான கந்தரப்பத்தையும் வைத்து அலங்கார பூஜை நடத்தப்பட்டது. 

இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கந்த கவச பாராயணம் செய்து முருகப் பெருமானை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...